அப்பா வரும்வரை
தூங்காமல் இருந்து
அவர் வாங்கிவரும்
தின்பண்டங்களைச் சாப்பிட
அக்காவும் நானும்
விழித்து இருந்தது!
அந்த தீபாவளிக்கு
தையல்காரரிடம் கொடுத்த
புதுத்துணியை வாங்க
ஆசையாய் சென்று வந்தது!
பட்டாசு வெடிக்க
பகல் இரவாய் காத்திருந்தது!
இப்போது நினைத்தாலும்
இதயம் இனிக்கிறது.
கடந்துபோன நினைவுகள்
காலங்கடந்த ஆசைகள்
ஆனாலும் மனத்திற்குள்
வந்துசெல்கின்றன.
அந்த மறக்காத நினைவுகளைச்
சொல்லிச் செல்கின்றன.
- தென்மாப்பட்டு அ.ராஜா