மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் உள்ள இந்தக் காலகட்டத்தில் மலேசிய போலிஸ் அதிகாரி ஒருவர் இரண்டு வெளிநாட்டுப் பெண்களைக் கடத்தி, ஹோட்டல் ஒன்றில் அவர்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
பெட்டாலிங் ஜெயாவில் பணியில் இருந்த அந்த போலிஸ் கண்காணிப்பாளர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (ஏப்ரல் 10) இரவு சாலைத் தடுப்பு ஒன்றில் அந்தப் பெண்களை, 30களில் இருக்கும் அந்த அதிகாரி தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது.
போலிசால் மீட்கப்படுவதற்கு முன்பாக, அவ்விரு பெண்களின் விருப்பத்துக்கு மாறாக அந்த அதிகாரி அவர்களை அருகில் இருந்த ஹோட்டல் ஒன்றில் அடைத்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
நேற்று இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாகக் குறிப்பிட்ட பெட்டாலிங் ஜெயா மாவட்ட உதவி ஆணையர் நிக் எஸானீ முகமது ஃபைசால் கூறினார்.
அவ்விரு பெண்களும் அபாய நிலையிலிருந்து வெளியேறியிருப்பதை உறுதிசெய்வதுதான் எங்களது முன்னுரிமை என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சேர்ந்த 20, 33 வயதுகளில் இருந்த அவ்விரு மங்கோலியப் பெண்கள் வைக்கப்பட்டிருந்த அந்த ஹோட்டலில் நேற்று இரவு 9.30 மணியளவில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதாக திரு நிக் எஸானீ தெரிவித்தார்.
சம்பவத்தில் தொடர்புடைய அந்த போலிஸ் அதிகாரி வேறோர் இடத்தில் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், “அந்தப் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் என்றாலும் அவர்களையும் பாதுகாக்க வேண்டியது அவசியம்,” என்றார்.
விசாரணைகளை விரைவில் முடித்துவிட முடியும் என்று குறிப்பிட்ட அவர், தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.