வார்த்தைகள் மிகவும் வலிமை வாய்ந்தவை என்றும் அவற்றைக் கொண்டு ஒருவரை வாழ்க்கையில் உயரத்துக்குக் கொண்டு செல்ல முடியும் என்றும் கூறுகிறார் ராஷ்மிகா மந்தனா.
அதேசமயம், சில வார்த்தைகளில் உள்ள கடுமை ஒருவரை அழித்துவிடும் வாய்ப்பும் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“வாழ்க்கையில் சில விஷயங்கள் மிக முக்கியமானவையாகக் கருதுகிறேன். நாள்தோறும் காலை தூங்கி எழுந்ததும் என் செல்லப் பிராணிகளுடன் நேரத்தைச் செலவிடுகிறேன்.
“நண்பர்களைச் சந்திப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. வார்த்தைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்பதை உணர்ந்திருப்பதால்தான், யார் என்ன சொன்னாலும் கவனமாகக் கேட்டுக்கொள்கிறேன்.
“பணி முடிந்து வீட்டிற்கு வந்தால் அனைவரது பாதங்களையும் மரியாதையுடன் தொட்டு வணங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.
“எனது உதவியாளர்கள், பணியாளர்களின் கால்களைத் தொட்டு வணங்குவதும் என் வழக்கம். ஏனெனில் நான் யாரையும் வேறுபடுத்திப் பார்க்க விரும்பவில்லை. நான் அனைவரையும் மதிக்கிறேன்,” என்கிறார் ராஷ்மிகா.