பெங்களுரு: ஆஸ்திரேலியா- இந்திய அணிகள் மோதும் கடைசி இரண்டு ஒருநாள் கிரிக் கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜடேஜா நீக்கப்பட்டு உள்ளார். அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்று எதிர் பார்க்கப்பட்ட தவானுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், மூன்று போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப் பற்றி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் கடைசி 2 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக அக்சார் முதல் 3 போட்டிகளில் இடம்பெற வில்லை. அவருக்குப் பதிலாக ஜடேஜா சேர்க்கப்பட்டு இருந்தார். தற்போது அக்சார் பட்டேலுக்கு காயம் குணமடைந்ததால் ஜடேஜா நீக்கப்பட்டு, மீண்டும் அவர் சேர்க்கப்பட்டு உள்ளார். ஜடேஜா அணியில் சேர்க்கப் பட்டு இருந்தாலும் விளையாடும் 11 பேர் பட்டியலில் அவர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. தனது மனைவியின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால், தவான் முதல் மூன்று போட்டி களில் கலந்துகொள்ளவில்லை.
இந்திய அணியின் பந்தடிப்பாளர் ஷிகர் தவான். படம்: ஏஎஃப்பி