ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா இயக்கத்தில் தயாராகும் ‘உன்னால் என்னால்’ என்ற படத்தில் வில்லியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் சோனியா அகர்வால்.
அரசாங்கத்துக்குச் சொந்த மான நிலப்பகுதிகளை விற்று பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து ஏமாற்றும் கும்பலின் தலைவி வேடமாம்.
“இது நான் வில்லியாக நடிக்கும் முதல் படம். அதனால் ஒவ்வொரு காட்சியிலும் கூடு தல் கவனம் செலுத்தியுள் ளேன்,” என்கிறார் சோனியா.
தனுஷ் நடிப்பில் உருவாகும் அவரது ஐம்பதாவது படத்தை அவரே இயக்க உள்ளார். ஏற்கெனவே ‘பவர் பாண்டி’ படத்தை இயக்கியுள்ள அவர், இந்தப் புதிய படத்தை நூறு கோடி ரூபாய் செலவில் தயாரிக்க உள்ளதாகத் தகவல். காளிதாஸ், துஷாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். எஸ்.ஜே.சூர்யா, சந்தீப்கிஷன் ஆகியோர் தனுஷுக்கு சகோதரர்களாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. வடசென்னை பின்னணியில் குண்டர் கும்பல்கள் இடையே நிகழும் மோதல்கள்தான் கதைக்களமாம். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கதாநாயகர்களுக்கு இணையாக நாயகிகளுக்கும் ஊதியம் அளிக்கப்பட வேண்டும் என்று கோரும் நடிகைகளின் பட்டியலில் ஷ்ருதி ஹாசனும் இணைந்துள்ளார்.
ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, அண்மைய பேட்டி ஒன்றில் தாம் ஹாலிவுட் நாயகர்களுக்கு இணையாக சம்பளம் பெறுவதாகவும் இந்த உயரத்தை அடைய தமக்கு இருபது ஆண்டுகள் தேவைப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஷ்ருதி, தமது உழைப்பால் பிரியங்கா பெரும் அற்புதத்தை நிகழ்த்தி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“சினிமா துறையில் சமமான ஊதியம் குறித்து எந்தப் பேச்சும் எழுவது இல்லை. எனினும் நாயகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கும் ஊதியம் கிடைக்கும் நாள் விரைவில் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்,” என்கிறார் ஷ்ருதி.
‘கான்’ பட விழாவில் பங்கேற்ற தருணத்தை மறக்க இயலாது என்றும் வித்தியாச மான கலாசாரங்களை பிரதி பலிக்கும் நிகழ்வில் இந்தியா வின் பிரதிநிதியாக பங்கேற்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஷ்ருதி தெரிவித்துள்ளார்.
சிம்புவின் 48வது
படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவது முடிவாகிவிட்டது. இப்படத்தின் நாயகியாக இந்தி நடிகை திஷா பதானி ஒப்பந்தமாகி உள்ளதாகத் தகவல். முன்னதாக இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகக் கூறப்பட்டது.