சான்பிரான்சிஸ்கோ: கலிஃபோர் னியா மாநிலத்தின் திராட்சை தோட்டப் பகுதிகள் கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீயில் எரிந்து சாம்பலானதாகவும் ஏராளமான சொத்துகள் நாசமான தாகவும் அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். காட்டுத்தீயில் 100,000 ஏக்கர் நிலம் எரிந்து சாம்பலானதாகக் கூறப்படுகிறது. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மிக வேகமாகப் பரவும் காட்டுத் தீயில் சிக்கி இதுவரை குறைந்தது 11 பேர் உயிரிழந்த தாகவும் 100க்கும் அதிகமானோ ரைக் காணவில்லை என்றும் மாநில உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கலிஃபோர்னியாவின் நஃபா, சோனோமா, யூபா, மென்டோசினோ உள்ளிட்ட பல பகுதிகளில் காட்டுத் தீ வேகமாகப் பரவி வருகிறது. வறட்சி காரணமாகவும் பலத்த காற்று வீசுவதாலும் காட்டுத் தீ பரவி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சுமார் 20,000 பேர் வெளியேறி யுள்ளனர்.
கலிஃபோர்னியாவில் மிக வேகமாகப் பரவும் காட்டுத் தீயிலிருந்து தனது வீட்டைக் காப்பாற்ற குடியிருப்பாளர் ஒருவர் விரைந்து செல்கிறார். படம்: ஏஎஃப்பி