நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘ஜெயிலர்’ திரைப்படம்.
இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
கதைப்படி, ரஜினிகாந்த் சிறைத்துறை அதிகாரியாக நடிக்கிறார். அவரது கதாபாத்திரத்தின் பெயர் முத்துவேல் பாண்டியன்.
கடந்த சில மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது. அண்மையில் படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளைப் படமாக்கி வந்தனர்.
இந்நிலையில், படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, ‘ஜெயிலர்’ படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக ‘ஜெயிலர்’ உருவாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.
எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி இப்படம் திரைகாணும் என எதிர்பார்க்கப்படுகிறது.