கோ இ சியன் என்னும் பெண்ணுக்கு வீட்டில் உள்ள கழிவறையில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய வழிசெய்ததாக 1,400 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அந்தப் பெண் தன்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை மறுத்து கொசுக்கள் மீது பழி சுமத்தினார். வீட்டிற்குள் கொசுக்களை தான் அனுமதிக்கவில்லை என்றும் தன் வீட்டில் இரு கழிவறைகள் உள்ளதாகவும் அதில் ஒன்றை தாம் பயன்படுத்துவதில்லை என்றும் கூறினார்.
இருப்பினும் கோவின் வாதத்தை நீதிபதி ஏற்க மறுத்தார்.
2022ஆம் ஆண்டு கோவின் வீட்டில் தேசிய சுற்றுப்புற வாரியத்தின் அதிகாரிகள் சோதனை செய்தபோது கழிவறையில் கொசுக்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டனர். அதன் பின் நடவடிக்கை எடுக்கப்பட்டது.