தியான்ஜின்: ஆசிய கண்டத்துக்கான உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி தகுதியாட்டத்தில் சிங்கப்பூரை 4-1 எனும் கோல் கணக்கில் வென்றது சீனா.
இந்த ஆட்டத்துக்கு ஐந்து நாள்களுக்கு முன்பு நடைபெற்ற உலகக் கிண்ணத் தகுதியாட்டத்தில் சிங்கப்பூரும் சீனாவும் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டன. சிங்கப்பூர் தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற அந்த ஆட்டத்தின் முடிவு சிங்கப்பூர் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்தது.
ஆனால் செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 26) சீனாவின் தியான்ஜின் நகிரில் நடைபெற்ற சி பிரிவு ஆட்டத்தில் சீனா மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியது.
ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் கோல் எண்ணிக்கை 1-1 என சமநிலையில் இருந்தது. சீனா முன்னுக்குச் சென்ற மறு நிமிடமே சிங்கப்பூர் சமநிலை கண்டது. ஆனால் பிற்பாதியாட்டத்தில் சீனா மேலும் மூன்று கோல்களைப் போட்டு வெற்றிபெற்றது.