நூ காம்ப்: ஒரு கோல் போட்டு பின்னர் தற்காப்பில் கவனம் செலுத்தி பார்சிலோனாவை எதிர் கொள்வது, அதற்கடுத்து இரண்- டாவது சுற்று ஆட்டத்தில் சொந்த மைதானத்தில் பார்சிலோனாவை மூச்சு முட்ட தாக்கி வெற்றி பெறுவது என்ற அட்லெட்டிக்கோ மட்ரிட்டின் திட்டம் எடுபடவில்லை. சிங்கப்பூர் நேரப்படி நேற்று அதிகாலை பார்சிலோனாவுக்கும் அட்லெட்டிக்கோ மட்ரிட்டுக்கும் இடையே நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் காலிறுதிப் போட்டி ஒன்றில் முன் னாள் லிவர்பூல், செல்சி வீரரான ஃபெர்னாண்டோ டோரெஸ் தமது ஆரம்பகால விளையாட்டுத் திறனை மீண்டும் ரசிகர்கள் கண் முன் கொண்டு வரும் விதத்தில் ஆட்டத்தின் 25ஆம் நிமிடத்தில் சக வீரரான கோக்கே கொடுத்த பந்தை பார்சிலோனாவின் கோல் வலைக்குள் செலுத்தினார்.
இதையடுத்து ஆட்டத்தில் தற்காப்பை மட்டுமே நம்பி பார்சிலோனாவை தடுமாற வைக்க லாம் என்று அட்லெட்டிக்கோ அணி களமிறங்கியது. ஆனால், எந்த டோரெஸ் மூலம் ஒரு கோல் கிடைத்ததோ அதே டோரெஸ் பின்னர் ஆட்டத்தின் 35ஆம் நிமிடத்தில் தப்பாட்டம் காரணமாக இரண்டாவது மஞ்சள் அட்டை காண் பிக் கப்பட்டு மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். டோரெசின் வெளியேற்றம் பற்றிக் குறிப்பிட்ட அட்லெட்டிக்கோ மட்ரிட்டின் நிர்வாகி சிமியோனே, "என்ன நினைக்கிறேன் என்று என்னால் சொல்ல இயலாது, ஆனால் நிச்சயமாக நான் டோரெஸ் மீது கோபப்படவில்லை," என்று தனது கோபத்தை வெளிப் படுத்தினார்.
பார்சிலோனா அணியும் அட்லெட்டிக்கோ மட்ரிட் அணியும் நேற்று முன்தினம் பார்சிலோனாவில் மோதின. அந்த ஆட்டத்தின் இரண்டாவது கோலைப்போடுகிறார் சுவாரெஸ். படம்: ராய்ட்டர்ஸ்