சாங்கி ஏர்போர்ட்ஸ் இன்டர்நேஷனலுக்கும் இந்தியாவின் விமானப் போக்கு வரத்து ஆணையத்துக்கும் இடையிலான கூட்டு முயற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத் தவும் விரிவுபடுத்தவும் முன்வைக்கப் பட்டிருந்த திட்டம் தொடராது என்று உறுதி செய்யப்பட்டது. வர்த்தக அம்சங்கள் தொடர்பில் இணக்கம் காண முடியாததால் திட்டம் கைவிடப்பட்டதாக சாங்கி விமான நிலையக் குழுமத்தின் துணை நிறுவன மான சாங்கி ஏர்போர்ட்ஸ் இன்டர் நேஷனல் தெரிவித்தது.
அகமதாபாத், ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களை இந்திய விமானப் போக்குவரத்து ஆணையத்துடன் இணைந்து பராமரிக்க சாங்கி ஏர்போர்ட்ஸ் இன்டர்நேஷனலை சிங்கப்பூர் கார்ப்பரேஷன் என்டர்பிரைஸ் கடந்த ஜனவரி மாதம் முன்மொழிந்தது.