ஜகார்த்தா: ஆண்களுக்கான 4x100 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் போட்டியை ஏற்று நடத்தும் இந்தோனீசியா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. நேற்று இரவு நடைபெற்ற இந்தப் பந்தயத்தை வென்ற ஜப்பான் தங்கத்தைக் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் ஜப்பான் பல ஆண்டுகளுக்குப் பிறகு தங்கம் வென்றுள்ளது. மின்னல் வேகத்தில் ஓடிய இந்தோனீசிய வீரர்கள் வெள்ளியை வென்றதும் அரங்கில் கூடியிருந்த இந்தோனீசிய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கினர்.
சீன வீரரைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தில் பந்தயத்தை முடித்த இந்தோனீசிய வீரர் (வலது). படம்: ஏஎஃப்பி