ஆசிய கிண்ணம்: கோஹ்லிக்கு ஓய்வு

புதுடெல்லி: ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் இம்மாதம் 15=28 தேதிகளில் நடக்கவிருக்கும் ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணித் தலைவரான விராத் கோஹ்லிக்கு இத்தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா அணித் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். புதுமுக வீரராக ராஜஸ்தானைச் சேர்ந்த 20 வயது இடது கை வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமது இடம்பெற்றுள்ளார். மொத்தம் ஆறு அணிகள் இரு பிரிவுகளாக இத்தொடரில் மோதுகின்றன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தானுடன் தகுதிச் சுற்றில் வெல்லும் அணி இடம்பெறும். இலங்கை, பங்ளாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகளும் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ளன.

இந்தியா=பாகிஸ்தான் மோதும் ஆட்டம் இம்மாதம் 19ஆம் தேதி துபாயில் நடைபெறும். அணி விவரம்: ரோகித் சர்மா (அணித் தலைவர்), ‌ஷிகர் தவான் (துணைத் தலைவர்), லோகேஷ் ராகுல், அம்பதி ராயுடு, மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், மகேந்திர சிங் டோனி, தினேஷ் கார்த்திக், ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சகல், அக்சர் பட்டேல், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா, ஷர்துல் தாக்குர், கலீல் அகமது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!