ஜகார்த்தா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான சுவர்ப்பந்துப் போட்டியில் இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது. இறுதிப் போட்டியில் இந்திய அணி ஹாங்காங் அணியுடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், சுனன்யா, தான்வி ஆகியோர் அடங்கிய இந்திய அணி, 2=0 எனும் கணக்கில் ஹாங் காங் அணியிடம் தோல்வி அடைந்தது. இதனால், இரண்டாம் இடம்பிடித்த இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
வெள்ளிப் பதக்கங்களுடன் இந்திய மகளிர் சுவர்ப்பந்து அணி. படம்: இபிஏ-இஎஃப்இ