எம்எல்ஏவை மணக்க இருந்த பெண் மாயம்

ஈரோடு: அதிமுக எம்எல்ஏவைத் திருமணம் செய்ய இருந்த மணப் பெண் திடீரென மாயமானது ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மணப்பெண்ணை யாரோ கடத்திச் சென்றுவிட்டதாக அவரது பெற்றோர் போலிசில் புகார் அளித்திருப்பது பரபரப்பை அதிகப்படுத்தி உள்ளது. பவானி சாகர் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக உள்ளார் ஈஸ்வரன். 43 வயதான இவருக்கும் கோ பி செ ட் டி ப் பா ளை ய த் தை ச் சேர்ந்த சந்தியா (வயது 23) என்பவருக்கும் அண்மையில் திருமணம் நிச்ச யிக்கப்பட்டது. இதையடுத்து வரும் 12ஆம் தேதி இவர்களது திருமணம் நடை பெற இருந்தது.

இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளைக் கவ னித்து வந்த நிலையில் மணமகள் சந்தியா திடீரென மாயமானார். கடந்த 1ஆம் தேதி சத்தியமங் கலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் செல்வதாகப் பெற்றோரிடம் கூறியுள்ளார் சந்தியா. எனினும் அன்று இரவு அவர் வீடு திரும்பவில்லை. அத்துடன் உறவினர் வீட்டுக்கு அவர் செல்ல வில்லை என்பதும் தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த சந்தியா வின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியாததால் காவல்துறையை அணுகினர். திருப்பூரைச் சேர்ந்த ஓர் ஆட வருக்கும் சந்தியாவுக்கும் பழக்கம் இருந்ததாகவும், அந்த நபர்தான் தங்கள் மகளைக் கடத்திச் சென் றிருக்க வேண்டும் என்றும் போலி சில் அளித்த புகார் மனுவில் சந்தி யாவின் பெற்றோர் குறிப்பிட் டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!