ஃபாண்டி: பயமில்லை என நிரூபித்துள்ளோம்

நட்புமுறை காற்பந்து ஆட்டத்தில் மொரீ‌ஷியஸ் குழுவுடன் 1=1 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூர் சமநிலை கண்டது. இந்த ஆட்டம் பீஷான் விளையாட்டரங்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் மொரீ‌ஷியஸ் கோல் போட்டு விளையாட்டரங்கத்தில் கூடி இருந்த ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இடைவேளையின்போது 1=0 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூர் பின்தங்கியிருந்தது. பிற்பாதியில் அனுபவமிக்க வீரர்களான ஷாரில் இஷாக், கைரூல் அம்ரி, பைஹாக்கி கைஸான் ஆகியோரைக் களமிறக்கினார் சிங்கப்பூர் குழுவின் இடைக்காலப் பயிற்று விப்பாளர் ஃபாண்டி அகமது. இது ஆட்டத்தின் போக்கை மாற்றி அமைத்தது.

ஆட்டம் முடிய 16 நிமிடங்கள் இருந்த போது ஷாரில் இஷாக் கொடுத்த பந்தை வலைக்குள் சேர்த்தார் ஃபாண்டியின் மகனான இக்சான் ஃபாண்டி. இதுவே இக்சானின் முதல் அனைத்துலக ஆட்ட கோலாகும். "பயிற்சிகளின்போது தங்க ளுடைய திறமையைக் காட்ட இளம் வீரர்கள் சற்று தயங்கினர். ஆனால் மொரீ‌ஷியஸ் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் எதிரணி யைக் கண்டு பயப்படவில்லை என்பதை அவர்கள் நிரூபித் துள்ளனர். எங்களது ஆட்டக் காரர்கள் நன்றாக விளை யாடினர். ஆட்டத்தின்போது விட்டுக்கொடுக்காமல் போட்டி யிட்டனர்," என்று ஃபாண்டி பெருமிதத்துடன் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!