வேலையிழந்த ஊழியர்களுக்கான காப்புறுதித் திட்டம் இருந்தால் அவர்கள் வேலையிழந்து இருக்கும் காலத்தில் ஏற்படக்கூடிய நிதிச் சுமைக்குத் தீர்வாக இருக்கும். புக்கிட் பாத்தோக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகத் தாம் தேர்வு பெற்றால் மேற்கண்ட காப்புறுதித் திட்டத்துக்காக போரா டுவேன் என்று புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தலில் போட்டியிடும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான டாக்டர் சீ சூன் ஜுவான் கூறினார். புக்கிட் பாத்தோக் தொகுதி மக்களின் முக்கிய அக்கறையாக இருப்பது ஆட்குறைப்புதான் என்று குறிப்பிட்ட டாக்டர் சீ, தாம் பரிந்துரைக்கவிருக்கும் காப்புறு தித் திட்டம் வழி ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்கள் ஆகக் கடைசியாக தாங்கள் பெற்ற சம்ப ளத்தின் முக்கால் பகுதியை, வேலை இழந்த முதல் ஆறு மாதங் களுக்குப் பெறுவார்கள் என்றார்.
புக்கிட் பாத்தோக் பூங்காவில் குடியிருப்பாளர் ஒருவருடன் கைக் குலுக்குகிறார் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் சீ சூன் ஜுவான். படம்: சாவ் பாவ்