வைதேகி ஆறுமுகம்
தீபாவளி வந்தால் லிட்டில் இந்தியா வட்டாரமே களைகட்டி விடும். தெருவெங்கும் ஒளியூட்டும் வண்ண விளக்கு அலங்காரத்துடன் கடைகள் எங்கும் நிரம்பி வழியும் புது வரவுகளுடன் தீபாவளிக்கென சிறப்பாக அமைக்கப்படும் சந்தை களும் ஒரு மாத காலத்திற்கு கொண்டாட்ட உணர்வை ஊட்டும். கேம்பல் லேன் தீபாவளி சந்தை யில் பண்டிகைக்குத் தேவையான ஆடைகள், ஆபரணங்கள், அலங் காரப் பொருட்கள், பலகாரங்கள் என எல்லாப் பொருட்களும் கிடைக்கின்றன.
பல ஆண்டுகளாக பிரபலமாக இருந்து வரும் அனார்கலி உடை யிலிருந்து பலாசோ, ஷராரா போன்ற பலதரப்பட்ட உடைகள் கட்டுப்படியாகக்கூடிய விலையில் விற்கப்படுகின்றன. ஆண் குழந்தைகளுக்கு அழகான ஜிப்பாக்கள், இவ்வாண்டு பிரபலம் அடைந்துவரும் பெண் குழந்தைகளுக்கான 'பாகுபலி தேவசேனா' ஆடையும் விற்கப்படு கின்றன. ஆண்களுக்கான ஜிப்பாக்களும் புதிய வடிவங்களில் அறிமுகமாகியுள்ளன. தீபாவளி சந்தையில் கடந்த பத்தாண்டு களாக துணிக்கடை நடத்திவரும் திரு சாஜான் குடும்பத்தினர் ஆண்களுக்கு பல்வேறு விதமான டிசைன்களில் ஜிப்பாக்களை விற்கிறார்.
பிக் பாஸ், ஷாஹிட் கப்பூர் போன்ற பெயர்களை கொண்ட டிசைன்களுடன் இவ்வாண்டு கழுத்தின் ஓரத்தில் நீண்ட பொத் தான்கள் தைக்கப்பட்ட சீமராஜா ஜிப்பா கிடைக்கும் என திரு சாஜான் குறிப்பிட்டார். "இந்த ஆண்டு தீபாவளி விற் பனை சற்று மந்தமாக இருந்தாலும் பல வண்ணங்களில், புதிய பாணி ஆடைகளை நியாயமான விலைக்கு விற்பதால் வாடிக்கை யாளர்கள் ஆர்வத்துடன் என் கடைக்கு வருகிறார்கள்," என்றார். சேலைகளுக்கும், பஞ்சாபி ஆடைகளுக்கும் ஏற்ற வளையல் கள் வரிசையாக அடுக்கப்பட்டு பல வண்ணங்களில் ஜொலிக்கின் றன. பிராகாசமான நிறங்களில், புதிய பாணி தோடுகள் விதவித மான பொட்டுகள், இந்திய உடை களுக்குப் பொருத்தமான வேலைப் பாடு கொண்ட காலணிகள் என அலங்காரப் பொருட்களும் இந்த ஆண்டு பெருமளவில் விற்கப்படு கின்றன.
தீபாவளி சந்தையில் மருதாணிக் கூடங்களும் உண்டு. கூடத்தில் ஒரு பெண் மருதாணி இட்டுக் கொள்கிறார். படங்கள்: முவாமினா