அக்ரா: 2019ஆம் ஆண்டின் ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையிலான காற்பந்துப் போட்டியை கெமரூன் ஏற்று நடத்துவதாக இருந்தது. இந்நிலையில், கெமரூனுக்கு வழங் கப்பட்ட அந்த உரிமை பறிக்கப் பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் அந்தப் போட்டிக்குத் தேவையான ஏற்பாடுகளை கெமரூன் இன்னும் நிறைவேற்றவில்லை என்று ஆப்பிரிக்கக் காற்பந்துச் சம்மேளனம் குறை கூறியுள்ளது. இதன் காரணமாகப் போட்டியை ஏற்று நடத்தும் வாய்ப்பை கெமரூன் இழந்துள்ளது. "போட்டியை ஏற்று நடத்தும் உரிமையை கெமரூனிடமிருந்து பறிக்க நாங்கள் முடிவு எடுத்துள்ளோம்," என்று சம்மேளனத்தின் தலைவர் திரு அகமது அகமது செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஆப்பிரிக்கக் கிண்ண காற்பந்துப் போட்டியை கெமரூனுக்குப் பதிலாக தென்னாப்பிரிக்கா அல்லது மொரோக்கோ ஏற்று நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிரிக்கக் கிண்ணப் போட்டி: உரிமையை இழந்த கெமரூன்
2 Dec 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 Dec 2018 07:16
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!