ப. பாலசுப்பிரமணியம்
இனம், சமயம், மொழி, குடும்பப் பின்னணி, பொருளாதார நிலை போன்ற அம்சங்களைப் பாராது அனைவரையுமே ஒருங்கிணைக் கும் தன்மை விளையாட்டுக்கு உண்டு. அவ்வாறு விளையாட்டை மையாகக் கொண்டு சிங்கப்பூரில் இருக்கும் வெவ்வேறு இனத்தவர் களுக்கிடையே நட்புறவை வளர்த் துக்கொள்ளும் விதத்தில் ஃபுட்சால் காற்பந்துப் போட்டி ஒன்று வரும் 16ஆம் தேதி நடை பெறவுள்ளது. கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு, மெக்பர்சன் இன, சமய நன்னம்பிக்கை குழு, ஸ்ரீ சிவன் கோயில் ஆகியவை இணைந்து முதன்முறையாக இந்தப் போட் டியை ஏற்பாடு செய்துள்ளன. இம்முயற்சி மூலம் பங்கேற்பாளர் களிடையே வெவ்வேறு இன, சமய புரிந்துணர்வு வலுப்படும் என்பது ஏற்பாட்டாளர்களின் நம்பிக்கை. ஆண்கள் பிரிவு, 18 வயதிற்கும் கீழ்பட்ட ஆண்கள் பிரிவு என இரு பிரிவுகளில் மொத்தம் 96 குழுக்கள் போட்டியிடும் என எதிர் பார்க்கப்படுகிறது.
மாத்தார் சாலையில் அமைந் துள்ள ஹோம் யுனைடெட் இளை யர் காற்பந்துப் பயிலக வளாகத்தில் நடைபெறும் இந்த ஒரு நாள் போட் டியில் $1,500 மதிப்புள்ள பரிசு களை வெல்ல குழுக்களுக்கு வாய்ப்புண்டு. பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் அன்பளிப்பும் வழங்கப்படும்.