தேனி: ஒரு சிறிய தகராற்றின்போது வாய்த்தகராறு முற்றி, பக்கத்து வீட்டுக்காரரைக் கீழே தள்ளிவிட்டவருக்கு ஏழாண்டு சிறையும் ரூ.3,000 அபராதமும் விதித்து தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சீனிவாசன் தீர்ப்பளித்தார். தேனி மாவட்டம், போடி ரெங்கநாதபுரம் கிராமம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அதிகாரி. இவருக்கும் பக்கத்து வீட்டுக்காரரான கோபால் என்பவருக் கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டில் சிறு வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருகட்டத்தில் இந்த வாக்குவாதம் முற்றிய நிலை யில் அதிகாரியை கோபால் கீழே தள்ளிவிட்டுள்ளார். அப் போது தலையில் பலத்த காயமடைந்த அதிகாரி பலியானார்.
அதிகாரியின் மனைவி பாப் பாத்தி புகாரைத் தொடர்ந்து கைதான கோபா லுக்கு இப்போது ஏழாண்டு சிறைத் தண்டனை விதிக் கப்பட்டுள்ளது. படம்: ஊடகம்