சென்னை: கொடுக்ககொடுக்க ஒரு நிறைவின்றி மேலும் மேலும் முளைத்துக் கொண்டிருக்கும் தேர்தல் செலவு நெருக்கடி காரண மாகவே அதிமுக முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட அமமுக செயலருமான செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமமுக சார்பில் மண்டல வாரியாக நடந்த பொதுக்கூட்டம், மாவட்ட வாரியாக நடந்த ஆர்ப் பாட்டம், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் என செந்தில் பாலாஜி கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. காலியாக உள்ள 20 தொகுதி களுக்கும் இடைத்தேர்தல் அறி விக்கப்பட்டால் 10 தொகுதிகளுக் கான தேர்தல் செலவை ஏற்கும்படி செந்தில் பாலாஜிக்கு தினகரன் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே தினகரனுக்காக வும் கட்சிக்காகவும் செந்தில் பாலாஜி நிறைய செலவுசெய்து நொந்து போயிருந்தவர், இதனால் கடும் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திக்கவும் செந்தில் பாலாஜிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஒருசிலருக்கு மட்டும் அமமுகவில் முக்கியத்துவம் தரப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
‘தேர்தல் செலவு நெருக்கடியால் திமுகவில் இணைந்தார்’
16 Dec 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Dec 2018 08:46
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!