லண்டன்: எஃப்ஏ கிண்ணப் போட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற நான்காம் சுற்று ஆட்டம் ஒன்றில் பர்ன்லி காற்பந்துக் குழுவை 5-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தி மான்செஸ்டர் சிட்டி அபார வெற்றி பெற்றது.
கேப்ரியல் ஜீசஸ், பெர்னாடோ சில்வா, கெவின் டி பிரய்ன, செர்ஜியோ அகுவேரோ ஆகிய மேன்சிட்டி ஆட்டக்காரர்கள் அடித்த தலா ஒரு கோலும் பர்ன்லி ஆட்டக்காரர் கெவின் லோங் தனது சொந்த வலைக்குள் தவறாகப் புகுத்திய ஒரு கோலும் சிட்டியின் வெற்றிக்கு வித்திட்டன.
சிட்டி ஆட்டக்காரர்களின் திறனைக் கண்டு அசந்துபோன பர்ன்லி நிர்வாகி ஷான் டைக், இப்பருவத்தில் சிட்டி வெல்ல முடியாதது ஒன்றும் இல்லை என்று கூறியுள்ளார்.
"சிட்டியிடம் மிகச் சிறந்த ஆட்டக்காரர்கள் உள்ளனர். ஆட்டத்தை வெல்லக்கூடிய அபாரத் திறனும் மனோதிடமும் அவர்களிடம் நிறைந்துள்ளன. அப்படியென்றால், அக்குழு அனைத்துப் போட்டிகளையும் வெல்வதை யாரால் தடுக்க முடியும்?" என்று அவர் புகழாரம் சூட்டினார்.
பர்ன்லி குழு கடைசியாக விளையாடிய ஆறு ஆட்டங்களில் அதற்குக் கிட்டிய முதல் தோல்வி இதுவே.
பர்ன்லியை நொறுக்கியது மேன்சிட்டி
28 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Jan 2019 09:21
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!