லண்டனில் நடந்த இசை நிகழ்ச்சியில் தனது திறமையை வெளிப்படுத்தி இசை ஆர்வலர்களின் பாராட்டுகளைப் பெற்றுள் ளார் ஷ்ருதிஹாசன்.
அக்குறிப்பிட்ட இசை நிகழ்ச்சியில் பங்கேற்கவேண்டும் என்பது ஷ்ருதியின் கனவாம். அதற்கான வாய்ப்பு கிடைத்தபோது உடனடியாக லண்டன் பறந்துவிட்டார்.
தனது புதிய இசைத் தொகுப்பில் இடம்பெற உள்ள சில பாடல்களைப் பாடினார் ஷ்ருதி. இந்நிலையில் அப்பாடல்களால் ஈர்க்கப்பட்ட இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பலர் ஷ்ருதியை மீண்டும் லண்டனுக்கு வந்து இசை நிகழ்ச்சி நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனராம்.
"இத்தகைய வாய்ப்புகள் தேடி வருவது உற்சாகத்தை அளிக்கிறது. பிரபல இசைக் கலைஞர்கள் தங்களது இசை நிகழ்ச்சிகளை நடத்திய இடங்களுக்கு என்னையும் அழைப்பதை பெருமையாகக் கருதுகிறேன். நடிப்பு மட்டுமல்லாது இசையிலும் இனி கூடுதல் கவனம் செலுத்துவேன்," என்கிறார் ஷ்ருதி.
தற்போது ஷ்ருதியின் இசைநிகழ்ச்சிகள் தொடர்பான காணொளி கள் இணையத்தில் பலராலும் அதிகம் விரும்பிப் பார்க்கப்படுகின்றன.
இசையால் கவர்ந்த ஷ்ருதிஹாசன்
28 Jan 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Jan 2019 09:53
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!