திருமணமான பெண்களுக்கு மட்டுமே 'ஐவிஎஃப்' போன்ற செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சை கள் சிங்கப்பூரில் செய்யப்படுகின் றன. ஆனால், பல்வேறு காரணங் களுக்காக திருமணம் செய்து கொள்ளாமலேயே குழந்தை பெற விரும்பும் சிங்கப்பூர் பெண்கள் பலர் அத்தகைய சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் போக்கு அதிகரித்து வருகிறது.
அத்தகைய சிகிச்சைகளுக்காக பிரிட்டன், ஸ்பெயின், கனடா ஆகிய நாடுகளுக்கு அவர்கள் செல்வதாகவும் கூறப்பட்டது.
கடந்த ஆண்டில் பிரிட்டனில் உள்ள 'லண்டன் பெண்கள் மருந்தகம்', சிங்கப்பூரிலிருந்து சுமார் 100 பெண்கள் இது குறித்து விசாரித்ததாகக் குறிப்பிட்டது. 2017ஆம் ஆண்டில் இருந்ததைவிட இது இரண்டு மடங்கு எனக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டில் விசாரித்தவர் களில் 10 பேர் செயற்கைக் கருத் தரிப்பு சிகிச்சை மேற்கொண்ட தாகவும் கூறப்பட்டது.
இத்தகைய சிகிச்சைக்காக ஸ்பெயினில் உள்ள மருத்துவ மனைகளை சிங்கப்பூர் பெண்கள் நாடிய எண்ணிக்கை 2014ஆம் ஆண்டிலிருந்து 2018ல் மூன்று மடங்காகி இருப்பதாக ஐவிஐ-ஆர்எம்ஏ மருத்துவமனை தெரி வித்தது. 2014ஆம் ஆண்டிலிருந்து மொத்தம் 13 சிங்கப்பூர் பெண்கள் (30லிருந்து 50 வயதுக்குட்பட்ட) செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சை பெற்றுக்கொண்டதாக ஐவிஐ-ஆர்எம்ஏ மருத்துவமனையின் பேச்சாளர் தெரிவித்தார்.
செயற்கைக் கருத்தரிப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
4 Feb 2019 00:37 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Feb 2019 00:09
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!