சிங்கப்பூரர்கள் முடிந்தவரை தொடர்ந்து வேலை செய்யும் சாத்தியத்தை நாடு ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும் வாழ்நாள் கற்றலை ஒரு பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும் என்றும் துணை பிரதமர் தர்மன் சண்முகரத்னம் கூறினார்.
நேற்று முன்தினம் துடிப்புமிக்க முதுமைக்காலம் தொடர்பில் புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அவர் இவ்வாறு பேசினார். துடிப்பான முதுமைக்குப் பிறர் மீது அன்பு காட்டுவது, சமூகத்தில் பங்காற்றுவது ஆகியவற்றுடன் வாழ்நாள் கற்றலும் அமைய வேண்டும் என்றார் அவர். செய்யும் தொழில் ஆர்வம் ஊட்டக்கூடியதாக இருந்தால் அதில் வெகு காலத்திற்கு ஈடுபட மக்கள் விரும்புவார்கள். அத்துடன் மூப்படையும் சமூகத்தை மனதில் கொண்டு வேலை மறு வடிவம் பெறவேண்டும். வெவ்வேறு நபர்களின் திறன்களுக்கு ஏற்ப வேலைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும். அத்துடன் தொழிலாளிகளின் ஒவ்வொரு பங்களிப்பும் அங்கீகாரம் பெறவேண்டும். "நம் மூளைகள், உடல்கள் வயது காரணத்தால் பாதிப்படைவது உண்டு. அதைத் தவிர்ப்பதற்குத் தொடர்ந்து கற்றலில் ஈடுபடுதல், துடிப்புமிக்க முதுமைக்கால வாழ்க்கைமுறையைக் கடைபிடித்தல், தொடர்ந்து பங்களித்தல் அவசியம்," என்றார் திரு தர்மன்.
‘முதுமைக்காலத்திலும் தொடர்ந்து துடிப்புடன் செயல்படுவது அவசியம்’
11 Feb 2019 06:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Feb 2019 08:53
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!