சாஸ் எனப்படும் சமூக சுகாதார உதவித் திட்ட அட்டைக்குச் சென்ற ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங் களில் விண்ணப்பித்த அல்லது புதுப் பித்த சுமார் 7,700 பேர் சரியாகக் கணக்கிடப்படாத சுகாதாரப் பராமரிப்பு மானியங்களைப் பெற்று இருக்கிறார்கள். கணினி முறையில் ஏற்பட்ட கோளாறே இதற்குக் காரணம் என்று சுகாதார அமைச்சு நேற்று அறிவித்தது. என்சிஎஸ் நிறுவனம் நிர்வகித்து நடத்தும் கணினி முறை, அந்த 7,700 பேருக்கு உரிய மானியங்களைத் தவறாகக் கணக்கிட்டுவிட்டது என்று அமைச்சு விளக்கியது. இந்த எண்ணிக்கை, சாஸ் அட்டை வைத்துள்ள அனைவரோடும் ஒப்பிட்டு பார்க்கையில் சுமார் 17% ஆக இருக் கிறது. அட்டைகளுக்காகவும் அட்டை களைப் புதுப்பிப்பதற்காகவும் செய்யப் பட்ட விண்ணப்பங்கள் சென்ற ஆண்டு செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை பரிசீலிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய மானியங்கள் நேற்று சரிப்படுத்தப்பட்டு விட்டதாக அமைச்சு குறிப்பிட்டது. பாதிக்கப்பட்டவர்கள் எந்தவிதச் செயலையும் செய்யவேண்டிய தேவை இல்லை என்றும் அமைச்சு கூறியது.
7,700 பேருக்கான சாஸ் மானியம் கணக்கீடு தவறு
17 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Feb 2019 11:33
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!