புதுவை: கடந்த ஆறு நாட்களாக புதுவை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டிருந்த புதுவை முதல்வர் நாராயணசாமி, நேற்று மாலை கிரண்பேடியைச் சந்தித்துப் பேசினார். இதையடுத்து அவரது போராட்டம் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி புதுவை அமைச்சர வைக்கு எதிராகச் செயல்படுகிறார் என்றும், அரசியலமைப்புச் சட் டத்தை மீறுவதாகவும் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
இதையடுத்து ஆளுநர் மாளி கைக்கு வெளியே அவர் தர்ணாவில் ஈடுபட்டார். இரவு பகலாக இந்தப் போராட்டம் நீடித்த நிலையில், தம்முடன் பேச்சுவார்த் தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார் ஆளுநர் கிரண்பேடி.
எனினும் பேச்சுவார்த்தை தலைமைச் செயலகத்தில் தான் நடைபெற வேண்டும் என்று நாரா யணசாமி வலியுறுத்தியதை கிரண்பேடி ஏற்கவில்லை. இதனால் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடைபெற வில்லை.
இந்நிலையில் மீண்டும் பேச்சு வார்த்தைக்கு ஆளுநர் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து நேற்று மாலை கிரண் பேடியைச் சந்தித்தார் முதல்வர் நாராயணசாமி. மாநிலத்தின் நலன் கருதி பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடிவு செய்ததாக அவர் கூறினார்.
இதையடுத்து இருதரப்புக்கும் இடையே நீடித்து வரும் மோதல் முடிவுக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.
கிரண்பேடியைச் சந்தித்த நாராயணசாமி: மோதல் முடிவுக்கு வர வாய்ப்பு
19 Feb 2019 06:02 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Feb 2019 09:36
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!