ஹாங்காங்: இந்தோனீசியாவின் பாலியில் இருந்து 204 பயணிகள், 12 விமானச் சிப்பந்திகளுடன் நேற்று ஹாங்காங் நோக்கிப் புறப்பட்ட ஹாங்காங் ஏர்லைன்ஸ் விமானம் மோசமான வானிலை காரணமாக மீண்டும் பாலியில் தரையிறங்கியது. மோசமான வானிலையால் நடுவானில் அந்த ஏர்பஸ் விமானம் அதிகமாகக் குலுங்கியதாகவும் அதில் 17 பயணிகள் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அவர்களில் எழுவருக்கு பாலி விமான நிலைய மருந்தகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதர பத்துப் பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். பெரும்பாலான பயணிகளுக்குச் சிராய்ப்புகள் ஏற்பட்டபோதும் அவர்களால் எழுந்து நடக்க முடிந்தது என்றும் அளவுக்கு அதிகமாக ஆட்டம் கண்டபோதும் விமானத்திற்குப் பெரிய சேதமில்லை என்றும் பாலி விமான நிலையத் தலைமை நிர்வாகி கூறினார்.
மோசமான வானிலையால் ஆட்டம் கண்ட விமானம்; 17 பேர் காயம்
8 May 2016 08:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 May 2016 07:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!