மணிலா: பிலிப்பீன்சில் வேலைக்குச் செல்லும் புதிய தாய் மார்களுக்கு வழங்கப்படும் மகப் பேறு விடுப்பை அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட்டே நீட்டித்து உள்ளார்.
தென்கிழக்காசியாவிலேயே ஊழியரணியில் மகளிரின் பங்கு மிகக் குறைவான அளவைக் கொண்ட நாடு பிலிப்பீன்ஸ்.
அவ்வகையில், அந்நாட்டின் ஊழியரணியில் கூடுதலான மகளிர் சேர இந்த நடவடிக்கை உதவும் என எதிர்பார்க்கப்படு கிறது.
சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு தற்போதைய 60லிருந்து 105 நாட்களாக நீட்டிக்கப்பட புதிய சட்டம் வகைசெய்கிறது. அந்த விடுப்பில் ஏழு நாட்கள் தந்தைகளுக்கு வழங்கப்படலாம்.
ஒற்றை தாய்மார்களுக்குக் கூடுதலாக 15 நாட்கள் கிடைக்கும்.
பிலிப்பீன்சில் பாதிக்கும் மேற்பட்ட மகளிர் ஊழியரணியில் இடம்பெறவில்லை என்று உலக வங்கி மதிப்பிடுகிறது.
தலைமைத்துவம் மற்றும் நிபுணத்துவப் பொறுப்புகள் வகிக்கும் மகளிரைப் பொறுத்தவரை, ஆசி யாவில் பிலிப்பீன்ஸ் முன்னணி வகித்தாலும், அத்தகைய மகளிர் வசதிமிகுந்த பின்னணிகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
பிலிப்பீன்சில் தாய்மார்களுக்கு இரட்டிப்பாகும் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு
22 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Feb 2019 08:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!