விசாகப்பட்டினம்: இம்மாதம் 14ஆம் தேதி காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் இந்திய துணை ராணுவப் படையைச் சேர்ந்த 40 வீரர் கள் மரணம் அடைந்தனர்.
வரும் ஜூன் மாதம் 16ஆம் தேதி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி மோத பட்டியல் வரையப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக் கும் பாகிஸ்தானைச் சேர்ந்த அணி யுடன் இந்திய அணி விளையாடக் கூடாது என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் குரல் எழுப்பி வரு கின்றனர்.
சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட வேறு சில இந்திய கிரிக்கெட் பிரபலங் களோ பாகிஸ்தானுடன் மோதி அந்த அணியை வீழ்த்தி வெளியேற்ற முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானுடன் மோத வேண்டுமா என்பது குறித்து ஆலோசிக்க நடத்தப்பட்ட இந்திய கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் உரிய நேரத்தில் இந்த விஷயம் குறித்து மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து இறுதி முடிவு எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டுள் ளது. இந்நிலையில் நேற்று இரவு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதி ரான முதலாவது 20 ஓவர் போட்டியில் பங்கேற்க விசாகப்பட்டினம் சென்ற இந்திய அணியின் தலைவர் விராத் கோஹ்லியிடம் உலகக் கிண்ண கிரிக் கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதுமா? என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், "புல்வாமா தாக்குதல் துயரச் சம்பவத் தால் இந்திய அணி மிகுந்த அதிர்ச் சியும் வேதனையும் அடைந்துள்ளது. எங்களது நிலைப்பாடு மிகவும் எளி தானது. இந்திய அரசும் இந்திய கிரிக் கெட் வாரியமும் என்ன முடிவு எடுக் கிறதோ அதன்படி நாங்கள் நடப்போம். அவர்கள் எடுக்கும் முடிவை நாங்கள் மதித்து செயல்படுவோம்" என்று விராத் கோஹ்லி தெரிவித்தார்.
பாகிஸ்தானுடன் மோதுவது தொடர்பாக அரசின் சொல்படி நடப்போம்: கோஹ்லி
25 Feb 2019 09:53 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Feb 2019 09:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!