கொழும்பு: இலங்கையில் உள்நாட் டுப் போர் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகள் நிறைவுபெற்றும் அங்கு போலிசாரால் கைது செய்யப்படுவோரை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் போக்கு தொடர்வதாக ஐநா அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். ஐநாவின் மனித உரிமை வல்லுநரான ஜுவான் இ.மெண்டிஸ் இலங்கைத் தலைநகர் கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித் துப் பேசிய போது, போலிசாரிடம் கைதானவர்கள் சித்திரவதை செய்யப்படுவதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக அவர் தெரிவித்தார். போர் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அப்போது முதல் கைதானவர்கள் காணாமல் போவது, கொடுமைக்கு ஆளாக்கப்படுவது போன்ற செயல்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளன. உள்நாட்டுப் போரின்போது 16.000 முதல் 22,000 பேர் வரை காணாமல் போனது தெரிய வந்துள்ளதாக மெண்டிஸ் தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் என்ற வகையில் இப்போதுள்ள சட்ட அமைப்பு அந்நாட்டில் கொடு மைகள் தொடர்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளதாக அவர் எச்சரித்தார். அதுபற்றிய விவரங்களை அவர் வெளியிட்டுள்ளார். கைதுசெய்யப்படும் சந்தேகப் பேர்வழிகளின் பாதங்களில் பிரம்பு அல்லது இரும்புக் கம்பியால் அடித்து சித்திரவதை செய்த பின்னர் அவர்கள் கைகளில் விலங்கு மாட்டி சில மணி நேரங்களுக்கு விடுவிப்பர். பின்னர் மண்ணெண்ணெய்யில் நனைத்த பிளாஸ்டிக் பைகளால் முகத்தை மூடி மூச்சுத் திணறல் ஏற்படுத்துவது. கைதுசெய்யப்பட்டவரின் முகத்திலும் கண்களிலும் மிளகாய்த் தூளைத் தூவுவதோடு, பிறப்புறுப்பு களைச் சிதைத்து மிளகாய்த் தூள் போடுவது போன்ற துன்புறுத் தல்கள் இன்னும் இலங்கையில் நடப்பில் உள்ளதாகக் கூறப்படு கிறது.
சிலர் வாரக் கணக்காக கொடு மைப்படுத்தப்படுவதாகவும் திரு மெண்டிஸ் கூறினார். இலங்கைக்கு 9 நாட்கள் வருகை மேற்கொண்ட திரு மெண்டிஸ், சிறைக் கைதிகள் சிலரையும் கொடுமைப்படுத்தப்பட்டு உயிர் வாழும் சிலரையும் சந்தித்தார். இலங்கை அதிபர் மைத்ரிபால சிரிசேன ஏற்கெனவே உறுதியளித்தது போல் மனித உரிமை மீறல்களுக்கு ஒரு முடிவு கட்டுவார் என்று தாம் நம்புவதாக திரு மெண்டிஸ் கூறினார்.