புதுடெல்லி: பதவிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ தாம் பெற்ற ஊதியத்தைத் திருப்பி அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன் றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேல்துரை கடந்த 2006 முதல் 2011 வரை சேரன்மாதேவி தொகுதி எம்எல்ஏவாகப் பதவி வகித்தார். தேர்தலுக்கான மனுத்தாக்கலின்போது அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மற்றொரு வேட்பாளர், வேல்துரை அரசு ஒப்பந்ததாரர் என்பதால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என புகார் எழுப்பினார். எனினும் வேல்துரை தேர்தலில் போட்டியிட தேர்தல் அதிகாரி அனுமதித்தார். இந்நிலையில் அவர் வெற்றி பெற்றதை அடுத்து சுயேச்சை வேட்பாளர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு தள்ளுபடி ஆனது. அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வேல்துரை தேர்வு பெற்றது செல்லாது என அறிவித்தது. இதைச் சுட்டிக் காட்டிய சட்டப் பேரவைச் செயலர், வேல்துரை தம் பதவிக் காலத்தில் பெற்ற 21.58 லட்சம் ரூபாயைத் திருப்பிச் செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பினார். வேல்துரை உச்சநீதிமன்றத்தை அணுகினார். அவரது மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வேல்துரை தாம் பெற்ற ஊதியத்தைத் திருப்பிச் செலுத்த உத்தரவிட்டுள்ளது.
தகுதி நீக்கம்: எம்எல்ஏவுக்கான ஊதியத்தை திருப்பித் தர உத்தரவு
28 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Feb 2019 09:05
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!