கோலாலம்பூர்: பெர்லிஸ், பாகாங், கிளந்தான், திரெங்கானு ஆகிய நான்கு மாநிலங்களில் பாஸ் கட்சியுடன் கூட்டு அரசாங்கத்தை அமைக்க அம்னோ விருப்பம் தெரிவித்துள்ளது.
அம்னோ கட்சியின் இடைக்கால தலைவர் முகம்மது ஹசான் இத்திட்டம் பற்றி அறிவித்துள்ளார்.
இந்த ஆலோசனைத் திட்டம் பாஸ் கட்சியின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்தத் திட்டம் இன்னும் உத்தேச அடிப்படையில்தான் இருந்து வருகிறது என்றும் இதுகுறித்து மேலும் விவாதிக்கப் பட வேண்டியிருப்பதாகவும் அவர் சொன்னார். அம்னோ தரப்பில் இத்திட்டம் பற்றி ஆராய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் முகம்மது ஹசான் கூறினார்.பெர்லிஸ், பாகாங் ஆகிய மாநிலங்கள் அம்னோ ஆட்சியில் இருக்கும் நிலையில் கிளந்தானும் திரெங்கானுவும் பாஸ் கட்சி வசம் உள்ளன.
கேமரன் மலை மற்றும் செமினி தொகுதிகளில் கடந்த ஜனவரி மற்றும் மார்ச் 2ஆம் தேதி நடந்த இடைத் தேர்தலில் அம்னோ கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவ்விரு கட்சிகளும் சேர்ந்து பணியாற்று வதற்கு முறையாக ஓர் உடன்பாடு காண அக்கட்சிகள் இணக்கம் கண்டன.
நான்கு மாநிலங்களில் பாஸ் கட்சியுடன் கூட்டாட்சி அமைக்க அம்னோ திட்டம்
11 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Mar 2019 09:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!