சென்னை: தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக, தேமுதிக இடையே கடந்த பல நாட்களாக நீடித்து வந்த பேச்சுவார்த்தை ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து அதிமுக கூட்டணி யில் தேமுதிகவுக்கு நான்கு நாடா ளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளன.
இதனால் தேமுதிகவினர் உற் சாகம் அடைந்துள்ளனர். கூட் டணி இறுதி செய்யப்பட்டுள்ள தால் அவர்கள் பிரசாரப் பணி களைத் துவங்கியுள்ளனர்.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனைத்து தொகுதிகளிலும் நேரடியாகப் பிரசாரம் மேற்கொள்வார் என அவரது மகன் தெரிவித்துள்ளார்.
இம்முறை அதிமுக கூட்டணி யில் பாஜக, பாமக, தேமுதிக உள் ளிட்ட பல கட்சிகள் இணைந் துள்ளன. இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் திமுக அணியிலும் காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை இரவு வரை அதிமுக, தேமுதிக இடையேயான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது. எனினும் ஞாயிறு மாலை நாடாளுமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டது தலைமைத் தேர்தல் ஆணையம். இதையடுத்து காட்சிகள் மாறத் துவங்கின. அடுத்த அரைமணி நேரத்திலேயே இரு தரப்புக்கும் தொகுதிப் பங்கீடு தொடர்பான உடன்பாடு ஏற்பட்டது.
விஜயகாந்த் நேரடி பிரசாரத்தில் ஈடுபடுவார் என மகன் தகவல்
12 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Mar 2019 09:00
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!