உயர் ரக கணினித் துறையை மேம்படுத்தும் நோக்கில் கூடுதலாக $200 மில்லியனை அரசாங்கம் முதலீடு செய்யவுள்ளது என்று 'சூப்பர்கம்ப்யூட்டிங் ஆசியா 2019' மாநாட்டில் நேற்று நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் அறிவித்தார்.
உயர் ரக கணினி (சூப்பர் கம்ப்யூட்டர்) துறையில் கவனம் செலுத்துவது சிங்கப்பூர் அறி வார்ந்த தேசமாகும் இலக்கின் ஒரு பகுதியாகும்.
2020ஆம் ஆண்டின் ஆய்வு, புத்தாக்கம், செயல்முனைப்புத் திட் டத்தின் கீழ் புதிய தொழில்நுட்பங் களை உருவாக்க அரசாங்கம் $19 பில்லியன் ஒதுக்கியுள்ளது.
இதிலிருந்து இக்கூடுதல் நிதி பெறப்படும் என்று தேசிய ஆய்வு நிறுவன கழகத்தின் தலைவராக வும் உள்ள திரு ஹெங் பகிர்ந்து கொண்டார்.
கணினியின் திறனையும் கட் டமைப்பு வேகத்தையும் மேம்படுத்த இக்கூடுதல் நிதி உதவும். அத்துடன் உயர்கல்வி நிறுவனங் களுக்கும் ஆராய்ச்சி நிறுவனங் களுக்கும் தரமான பயன்பாடு அமையும்.
உயர் ரக கணினி பற்றி விளக் கிய அவர், 200க்கும் மேற்பட்ட இரைப்பை புற்றுநோய்க் கட்டிகள் தொடர்பான தகவல்களை ஆராய சாதாரண கணினிகள் 30 ஆண்டு கள் எடுக்கும்.
ஆனால் செயற்கை நுண் ணறிவில் இயங்கும் உயர் ரக கணினி சில மாதங்களில் அவ் வேலையை முடித்துவிடும். இது நோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி என்று உதாரணம் காட்டினார்.
கணினிகளிலேயே உயர் தொழில்நுட்பத்தில் இயங்குபவை இவ்வுயரக கணினிகள்.
உயர் ரக கணினிக்கு கூடுதலாக $200 மி. முதலீடு
13 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Mar 2019 08:44
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!