கிளமெண்டி தொடக்கப்பள்ளியும் பொதுப் பயனீட்டுக் கழகமும் இணைந்து நேற்று நடத்திய பயிற்சியில் மாணவர்கள் தண் ணீரை சிக்கனமாகப் பயன்படுத்து வது குறித்து கற்றுக்கொண்டனர். இம்மாதம் 22ஆம் தேதியன்று அனுசரிக்கப்படும் சிங்கப்பூர் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பள்ளியில் இப்பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பள்ளி வளாகத்தில் நடந்த இப்பயிற்சியின்போது தண்ணீர் விநியோகம் நின்றுவிட்டால் எப் படி இருக்கும் என்பதை மாணவர் கள் அனுபவபூர்வமாக அறிந்தனர். பள்ளியின் குளிர்நீர் சாதனங் களின் இயக்கம் நிறுத்தப்பட்டதால் மாணவர்கள் தண்ணீர்ப் புட்டி களை கொண்டு வந்திருந்தனர்.
பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர் கார்த்திகேயன் சச்சின், 12, இப்பயிற்சி மூலம் தண்ணீர் சேமிக்கும் பல உத்திமுறைகளைக் கற்றுக் கொண்டதாக சொன்னார்.
குளிக்க ஐந்து நிமிடம் போதும் என்பதை அறிந்த கார்த்திகேயன், இனி தன் சகோதரன் குளிக்க வெகு நேரம் எடுத்தால் சுடுநீர் சாதனத்தின் இயக்கத்தை நிறுத்தி விடப் போவதாகக் கூறினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற சுற்றுப் புற, நீர்வள மூத்த துணை அமைச் சர் டாக்டர் ஏமி கோர், தண்ணீர் சேமிப்பை ஊக்குவிக்கும் முயற்சி களில் பள்ளிகள் ஒரு முக்கிய பங்காளியாக இருப்பதாக கூறியது டன் இளம் வயதிலேயே தண்ணீர் சேமிக்கும் பழக்கத்தை வளர்த் துக்கொள்ள இதுபோன்ற பயிற் சிகள் பங்களிப்பதாகவும் தெரிவித்தார்.2019-03-14 06:10:00 +0800
மாணவர்களுக்கு தண்ணீர் சிக்கன பயிற்சி
14 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Mar 2019 16:16
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!