ஆர்ச்சர்ட் ரோட்டில் புகைப்பிடிப் பதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தை விட்டு புகைப்பிடிப்போ ருக்கு எதிராக நாளை முதல் எச் சரிக்கைக் கடிதங்கள் வழங்கப் படும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.
அந்த எச்சரிக்கைக் கடிதங்க ளில் அமலாக்க நடவடிக்கை ஏப்ரல் 1ஆம் தேதி நடைமுறைப் படுத்தப்படும் என்று குறிப்பிடப் பட்டிருக்கும். மேலும் எச்சரிக்கைக் கடிதங்கள் பெறுவோரின் விவரங் களை வாரியத்தின் அதிகாரிகள் குறித்துக்கொள்வர்.
இதற்கு முன் புகைப்பிடித்தலுக் காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை விட்டு அவ்வாறு செய்வோருக்கு இதுவரை வாய்மொழி எச்சரிக்கை தான் கொடுக்கப்பட்டு வந்தது என்றும் வாரியம் கூறியது.
அடுத்த மாதத்திலிருந்து புகைத்தலுக்காக ஒதுக்கப்பட்
டுள்ள இடத்தை விட்டு புகைப்போ ருக்கு $200 அபராதம் அல்லது அதிகபட்சமாக $1,000 நீதிமன்ற அபராதம் விதிக்கப்படலாம்.
புகைத்தல் பகுதியை விட்டு புகைப்பிடித்ததற்காக வாய்மொழி எச்சரிக்கை பெற்றவர்களின் எண் ணிக்கை இந்தத் திட்டம் இந்த ஆண்டு அறிமுகமானதிலிருந்து 67 விழுக்காடு குறைந்துள்ளது.
திட்டம் அமல்படுத்தப்பட்ட முதல் வாரத்தில் நாள் ஒன்றுக்கு 1,900 பேருக்கு வாய்மொழி எச் சரிக்கைகள் விடுக்கப்பட்டன. கடந்த வாரத்தில் அந்த எண் ணிக்கை 627க்குக் குறைந்தது.
"இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஆர்ச்சர்ட் ரோட்டில் புகைத்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை விட்டு வேறு இடங்களில் புகைப்போருக்கு எதிராக ஆலோ சனை கூறும் அணுகுமுறை கையா ளப்பட்டு வந்தது. இது தொடர்பான தகவல் பரிமாற்றமும் மக்களுக்கு விழிப்புணர்வை அதிகரிக்கும் முயற்சியும் பலன் அளித்துள்ளன," என்று வாரியம் தனது ஃபேஸ்புக் பக்கத் தில் கூறியது.
புகைத்தல் தொடர்பான குற்றம் புரிபவர்களுக்கு நாளை முதல் எச்சரிக்கைக் கடிதங்கள் கிடைக்கும்
17 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Mar 2019 11:21
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!