மரத்தூள், காய்ந்த இலைகளால் ஆன தரையுடன் புதிய இயற்கை விளையாட்டுப் பூங்கா நேற்றுத் திறக்கப்பட்டது.
குழந்தைகளை இயற்கையுடன் மேலும் அணுக்கமாக்கும் வகையில் தேசிய பூங்கா கழகம் உருவாக் கியுள்ள 'ஹோர்ட்பார்க்' எனும் இந்த விளையாட்டுப் பூங்காவின் திறப்பு விழாவில் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீயுடன், என்டியுசி மை ஃபர்ஸ்ட் ஸ்கூலைச் சேர்ந்த கிட்டத்தட்ட 50 பாலர்களும் கலந்துகொண்டனர்.
அங்குள்ள மர ஓடை (லாக் வாலி) என்ற சாசகப் பிரிவிலுள்ள மரத் துண்டுகளின் மீது ஏறி விளையாடினர். பாடும் விதைகள் (சிங்ஙிங் சீட்ஸ்) எனும் பிரிவில் தொங்கும் மூங்கில் கம்புகளுடையே நுழைந்து இசை எழுப்பினார்கள். மணல் கிடங்கில் வீடுகள் கட்டி மகிழ்ந்தார்கள்.
தட்டான்பூச்சிகளையும் பட்டாம் பூச்சிகளையும் பார்த்து வியந்தார்கள்.
அதிசய காடு (மேஜிக்கல் வுட்ஸ்), ஓடை, ரகசிய கூடம் (சீக்கிரெட் டென்), சமையலறை, புதையல் பாதை (டிரஷர் டிரெயில்) என வித்தியாசமான விளை யாட்டு இடங்கள் இந்த இயற்கைப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளன.
குழந்தைகள் இங்கு மகிழ்ச்சி யாக விளையாடி மகிழும் அதே நேரத்தில் தேசிய பூங்கா கழகத் தின் ஆய்வுக்கும் உதவுகிறார்கள்.
எதிர்கால விளையாட்டுப் பூங்காங்களை மரங்கள், மணல் என இயற்கையுடன் இணைத்து வடிவமைக்கும் தேசிய பூங்கா கழத்தின் இயற்கைப் பூங்கா திட்டத்தின் சோதனை முயற்சியாக இந்த 'ஹோர்ட்பார்க்' அமைக்கப் பட்டுள்ளது.
பாலர் பள்ளி மாணவர்களைக் கருத்தில் கொண்டு இயற்கையுடன் மனிதனுக்குள்ள உணர்வுபூர்வ மான தொடர்பைக் குறிக்கும் இந்த இயற்கை விளையாட்டுப் பூங்காத் திட்டத்தை தேசிய பூங்கா கழகம் உருவாக்கியுள்ளது.
சிறார்களின் முழுமையான வளர்ச்சிக்கு உதவி, அவர்களின் தன்னம்பிக்கையையும், புத்தாக்க வெளிப்பாட்டை அதிகரிக்கவும் அவர்களை இயற்கையுடன் ஒன்றி ணைக்கும் நோக்கத்தில் அவர் களை அதிக நேரத்தை வெளிப் புறத்தில் செலவிடத் தூண்டும் வகையில் இத்தகைய பூங்காங் களை உருவாக்க கழகம் திட்ட மிடுகிறது.
இயற்கையுடன் இணைந்த விளையாட்டுப் பூங்கா
20 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 May 2019 18:00
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!