கோலாலம்பூர்: லாபம் ஈட்ட சிரமப் படும் மலேசிய ஏர்லைன்ஸ் (எம்ஏஎஸ்) விமான நிறுவனத்தை வாங்குவதற்கு சில உள்ளூர், வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாக மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது தெரி வித்துள்ளார்.
"எம்ஏஎஸ் நம் தேசிய விமான நிறுவனமாக தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. ஆனால், அந்நிறுவனத்தால் சிறப்பாகச் செயல்பட முடிய வில்லை," என்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறினார்.
அந்த நிறுவனத்தை விற்கும் சாத்தியத்தையும் டாக்டர் மகாதீர் மறுக்கவில்லை. அதே வேளையில் அதை விற்கத்தான் வேண்டுமா என்பதையும் அரசாங்கம் ஆலோ சித்து வருவதாக அவர் சொன்னார்.
"வெளிநாட்டு நிர்வாகியையும் வைத்துப் பார்த்தோம். தொடர்ந்து நட்டம்தான் ஏற்பட்டது. அதனால், அதை விற்றுவிடுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது," என்றார் அவர்.
மகாதீர்: எம்ஏஎஸ் நிறுவனத்தை விற்பது குறித்து அரசாங்கம் ஆலோசனை
21 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Mar 2019 11:22
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!