தர்மபுரி: இளம்பெண் ஒருவர் முதல்வரின் பிரசார வாகனம் முன்பு திடீரென விழுந்ததால் தர்மபுரியில் பரபரப்பு ஏற்பட்டது.
21 வயதான ஜெனிபர் என்ற அந்தப் பெண்ணின் தாயார் கடந்த 3 தினங்களாக பெண்ணாகரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது தாய்க்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனப் புகார் எழுப்பியுள்ள ஜெனிபர் இதுகுறித்து முதல்வரிடம் முறையிட முடிவு செய்தார்.
நேற்று முன்தினம் இரவு பிரசாரம் மேற்கொள்வதற்காக பெண்ணாகரம் வந்தார் முதல்வர் பழனிசாமி. அப்போது பேருந்து நிலையம் அருகே சாலையில் காத்திருந்த ஜெனிபர் முதல்வரின் பிரசார வாகனம் அருகே வந்தபோது திடீரென அதன் முன்பு பாய்ந்து சாலையில் விழுந்தார். இதனால் போலிசார் அவரை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்நிலையில் முதல்வருடன் வந்த அமைச்சர் அன்பழகன் ஜெனிபரிடம் விசாரணை நடத்தி அவரது தாய்க்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.
முதல்வர் பிரசார வாகனம் முன்பு பாய்ந்த இளம்பெண்ணால் பரபரப்பு
25 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Mar 2019 09:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!