ஊழல் கறைபடிந்த அரசியல்வாதி களும் அரசாங்க அதிகாரிகளும் தேச விரோதிகளாக அறிவிக்கப் பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தி இருக்கிறது.
நீதித் துறையிலும் லஞ்ச, ஊழல் புகுந்துவிட்டதை ஒத்துக் கொண்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிர மணியம், நீதித்துறை ஊழலே அரசியலமைப்பின் ஆகப் பெரிய எதிரி என்று குறிப்பிட்டார். ஆத லால், ஊழலைக் கட்டுப்படுத்த நீதித்துறை கடுமையான நடவ டிக்கைகளை எடுக்கவேண்டும் என்று அவர் கருத்துரைத்தார்.
இந்தியாவில் உள்ள ஒவ்வொ ருவரும் ஏதோ ஒரு வகையில் லஞ்ச, ஊழலை எதிர்கொள்வ தாகக் குறிப்பிட்ட நீதிபதி, ஒருவர் தாயின் கருவறைக்குள் இருக்கும்போதே தொடங்கும் அந்தச் சமூகச் சீர்கேடுகள் அவர் இறப்பது வரையிலும் விடா மல் தொடர்கின்றன என்று கூறி வேதனைப்பட்டார்.
"அவர்கள், இந்தச் சிறந்த தேசத்தின் வளர்ச்சியைத் தடுக் கும் தேச விரோதிகள். பயங்கர வாதிகள் சமூக விரோதிகளாகச் சித்திரிக்கப்படுகின்றனர். அது போல, நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான ஊழல்வாதிகளும் தேச விரோதிகளாக அறிவிக்கப்பட வேண்டும். அவர்கள் சொந்த நலனை மட்டுமே முக்கியமாகக் கருதுகின்றனர்," என்றார் திரு சுப்பிரமணியம்.
கல்வி நிலையங்களிலும் அரசாங்க அலுவலகங்களிலும் லஞ்சமாக பாலியல் சேவைகளை எதிர்பார்க்கின்றனர் என்றும் பொது நிர்வாகத்தில் இதைவிட மோசமான விஷயம் வேறெதுவும் இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் நேரங்களில் லஞ்ச, ஊழல் தலைவிரித்தாடுவதைக் குறிப்பிட்ட அவர், "சட்டங்களை இயற்றி, நிறைவேற்ற வேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் கடமை, பொறுப்பு. அப்படி இருக்கும்போது, அவர்களே வாக்குக்கு லஞ்சம் தருவது, ஜனநாயகத்தின் வேரை அசைத்துப் பார்ப்பதாக உள்ளது," என்றார்.
ஊழல்வாதிகளை தேச விரோதிகளாக அறிவிக்க இந்திய நீதிபதி வலியுறுத்து
30 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Mar 2019 10:16
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!