புதுடெல்லி: ஆக்ராவில் இருந்து பயணிகள் பேருந்து ஒன்று நேற்றுக் காலை நொய்டாவை நோக்கிச் சென்றுகொண்டு இருந்தது. யமுனா விரைவுச் சாலையை நெருங்கியபோது அப்பேருந்து லாரி மீது மோதியதால் பெரும் விபத்து ஏற்பட்டது.
இச்சம்பவம் அதிகாலை 5 மணி அளவில் நிகழ்ந்தது. அப் பகுதியில் இருந்தவர்கள் விபத்து குறித்து போலிசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலிசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பேருந்தில் பயணித்த எட்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தனர்.
30 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாண்டோரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக் கப்பட்டது. விபத்து நிகழ்ந்த விதம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேகமாக மோதியதால் பேருந்தின் முன்பகுதி முற்றாக சிதைந்துவிட்டது.
புதுடெல்லி: விபத்தில் 8 பேர் பலி
30 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Mar 2019 10:37
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!