திருடப்பட்ட கடன் அட்டை தகவல்களைக் கொண்டு $10,000க்கு மேற்பட்ட மதிப்பிலான கள்ளத்தனமான பரிவர்த்தனைகளைச் செய்த இளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த இருவருக்கும் வயது 19, 20. திருடப்பட்ட கடன் அட்டை தகவல்களைக் கொண்டு அவர்கள் கடந்த மாதம் இந்தக் குற்றங்களைப் புரிந்ததாகவும் அவர்கள் இணையம் வழி கடன் அட்டை மோசடி செய்த கும்பலின் தொடர்பில் கைது செய்யப்பட்டதாகவும் போலிசார் நேற்று முன்தினம் இரவு தெரிவித்தனர்.
வர்த்தக விவகாரப் பிரிவின் அதிகாரிகள் இளையர்களை கேலாங் ரோட்டில் பிடித்தனர். அவர்களிடமிருந்து ஒரு மடிக் கணினி, ஐந்து கைபேசிகள், இரண்டு 'தம்டிரைவ்'கள், சுமார் $630 ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன (படம்).
இளையர்கள் இருவரின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், முறைகேடான கணினிப் பயன்பாட்டுச் சட்டத்தின்படி, அவர்களுக்கு $5,000 வரை அபராதம், இரண்டு ஆண்டு சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
அனைத்து கடன் அட்டை மற்றும் பற்று அட்டை வைத்தி ருப்பவர்கள் முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம் தங்கள் அட்டைகளின் விவரங்களைத் தெரிவிக்க வேண்டாம் என்று போலிசார் தங்கள் அறிக்கையில் ஆலோசனை கூறியுள் ளனர்.
திருடிய கடன் அட்டை தகவலைக் கொண்டு $10,000க்கு பொருள்வாங்கினர்
12 Apr 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Apr 2019 10:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!