முன்னைவிட தற்போது அதிகமான வழக்குகளை விசாரிக்கும் மேல் முறையீட்டு நிதிமன்றத்திற்குத் துணையாக மற்றொரு நீதிமன்றம் அமைக்கப்படலாம்.
இதற்காக உச்ச நீதிமன்றம் மறுசீரமைக்கப்படவேண்டும் என்றும் இதற்கான தெரிவுகளை அரசாங்கம் ஆராய்வதாகவும் சட்டம், சுகாதாரம் ஆகியவற்றுக்கான மூத்த துணையமைச்சர் எட்வின் டோங் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு 490 வழக்குகளை விசாரித்தது. 2013ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 314 ஆக இருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகள், நாளை தமிழ் முரசில்...