கோத்தாகினபாலு: மலேசியாவில் துவாரன் என்ற பகுதியில் அந்நாட்டு உள்துறை துணை அமைச்சர் மோட்டார் சைக்கிளில் சென்று நேற்று போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது கோத்தாகினபாலுவில் இருந்து ரானாவ் மாகாணத்திற்குச் செல்லும் சாலையில் காலை 10 மணியளவில் அவர் விபத்துக்குள்ளானார் என மலேசிய உள்துறை அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் அவருக்கு சிறிய அளவிலான சிராய்ப்புகள் ஏற்பட்டதாகவும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது. விபத்துக்கான காரணம் குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.