சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்தின் முன்னோடியாகப் போற்றப்படும் தமிழவேள் கோ சாரங்கபாணி அவர்களின் 116ஆவது பிறந்த நாளை கடந்த மாதம் 20ஆம் தேதி சமூகப் பணி செய்து கொண்டா டியது அவரது பெயரில் இயங்கும் சமூக அமைப்பு.
தமிழவேள் நற்பணி மன்றத்தின் உறுப்பினர்கள் ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லவாசி களுடன் தமிழவேளின் பிறந்த நாளைக் கொண்டாடினர். அதன் ஒரு பகுதியாக இல்லவாசிகளுக்கு மாலைநேர விருந்து உபசரிப்பு நடைபெற்றது.
1903ஆம் ஆண்டு தமிழகத்தில் பிறந்து தமது 21வது வயதில் சிங்கப்பூருக்குக் குடியேறிய திரு சாரங்கபாணி, இந்நாட்டில் தமிழ் மொழிக்காகவும் இந்திய சமூகத் திற்காகவும் அளப்பரிய பங்காற்றி உள்ளார்.
இன்று வரை வெற்றிநடை போடும் சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசை 1935ஆம் ஆண்டு தொடங்கிய அவர், இங்கு தமிழ் இலக்கியமும் தமிழ் எழுத்தாளர்களும் வளர அரும்பாடுபட்டார்.
தமிழ்க் கல்வியின் வளர்ச்சிக்கு 'தமிழ் எங்கள் உயிர் நிதி' ஏற்படுத் தியது, தமிழர்கள் ஒன்றிணைய தமிழர் திருநாள் நிகழ்ச்சிகளை நடத்தியது, இந்தியர்கள் இந் நாட்டில் நிலைத்து வாழ குடியுரிமை பெறச் செய்தது என திரு சாரங்க பாணி ஆற்றிய சமூகப் பணிகள் எண்ணிலடங்கா. அவரது நூற் றாண்டு விழா சிங்கப்பூர், மலே சியா மட்டுமல்லாது தமிழகத்திலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நூற்றாண்டு விழாவின் ஓர் அங்க மாக சிங்கப்பூரில் கோ சாரங்க பாணி கல்வி அறக்கட்டளை நிறு வப்பட்டது.
ஆண்டுதோறும் ஏப்ரல் 20ஆம் தேதி தமிழவேளின் பிறந்தநாளை யொட்டியும் மார்ச் மாதம் 16ஆம் தேதி அவரது நினைவுநாளை ஒட்டியும் சமூக நிகழ்ச்சிகளை தமிழவேள் நற்பணி மன்றம் கடந்த பல ஆண்டுகளாக நடத்தி வரு கிறது.
"தமிழவேளைப் பற்றி அடுத்த தலைமுறையினர் அறிந்திடவேண் டும். அவரது பணிகளும் பங்களிப் புகளும் உலகத் தமிழ்ச் சமூகத் திலிருந்து ஒருக்காலும் அகன்று விடக்கூடாது," என்றார் தமிழவேள் நற்பணி மன்றத் தலைவர் ப தியாக ராஜன். தமிழவேளின் தொண்ட ராகப் பணியாற்றிய அவர், "தமிழ வேளைப் பற்றிய பல நூல்களின் வெளியீட்டு விழா, தமிழ்மொழி விழாவின் அங்கமாக தமிழ்ச் சமூக முன்னோடிகளை நினைவு கூரும் தமிழவேள் விழா போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதோடு 'செம்மொழி' என்னும் தமிழ் இலக் கிய காலாண்டு இதழையும் வெளியிட்டு வருகிறோம்," என் றார்.