பெய்ஜிங்: அமெரிக்காவுடன் வர்த் தகம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த சீனாவிற்கு இப்போதைக்கு விருப்பம் இல்லை எனத் தெரிவ தாக அந்நாட்டின் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் அணுகு முறையில் நேர்மை இல்லாததே அதற்குக் காரணம் எனத் தெரி விக்கப்பட்டது.
அமெரிக்கா உண்மையிலேயே நேர்மையுடன் நடந்துகொண்டு புதிய நடவடிக்கைகளை எடுக்கா விடில், அதன் அதிகாரிகள் சீனா விற்கு வந்து பேச்சுவார்த்தை நடத் துவதில் அர்த்தமில்லை என்று கூறப்படுகிறது. சீனாவுடன் பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்கா விருப்பம் காட்டி வருகிறது. ஜப்பானில் அடுத்த மாதம் நடை பெறவுள்ள ஜி20 மாநாட்டில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கை சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக தாம் பேச இருப்பதாக திரு டிரம்ப் அண்மையில் கூறியிருந்தார்.
இந்நிலையில், சீனத் தொலைத் தொடர்பு நிறுவனமான ஹுவா வெய்க்குத் தடை விதிக்கக் கோரி திரு டிரம்ப் எடுத்த நடவடிக்கையால், நிலவரம் மேம்படுவதற்கு மாறாக முட்டுக்கட்டை போடப்பட்டுள்ள தாக சீனா கூறியது.
"பேச்சுவார்த்தை நடத்தி வர்த் தகப் போருக்குத் தீர்வு காண்பதில் அமெரிக்காவிடமிருந்து நம்பக மான எதுவும் வெளிப்படுவதாகத் தெரியவில்லை. மாறாக, எங்க ளுக்கு ஏற்கெனவே அளித்து உள்ள நெருக்குதலைத் தீவிரப் படுத்திக்கொண்டே அந்நாடு போகிறது," என்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியதாக செய்திகள் தெரிவிக் கின்றன. சீனாவிடமிருந்து நல்ல பதிலை எதிர்பார்க்க வேண்டு மெனில் அமெரிக்கா ஒத்துழைக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.