மலேசியாவைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரனின் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்தினம் அந்தத் தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் தற்காலிகமாகத் தள்ளிவைக்க முடிவெடுத்துள்ளது. அதிபரிடம் சமர்ப்பித்திருந்த கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து முறையிட எண்ணுவதன் அடிப்படையில் 31 வயது பன்னீர்செல்வம் பரந்தாமன், தனது மரண தண்டனையை ஒத்திவைக்க விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பத்தை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றது. அதிபரிடம் மன்னிப்பு கோரும் கருணை மனு நிராகரிக்கப்பட்ட தகவலை, மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்த தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் பன்னீர்செல்வம் அறிந்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டது. இதனால், மேல்முறையீடு செய்வது குறித்த தெரிவுகளை அறிந்துகொள்ள சட்ட ரீதியான ஆலோசனைகளைப் பெறுவதற்கு அவருக்குப் போதிய கால அவகாசம் இல்லை என்று தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் சுட்டினார். பன்னீர்செல்வத்தின் சிங்கப்பூர் வழக்கறிஞர்கள் கருணை மனுவின் நிராகரிப்பிற்கு எதிரான மேல்முறையீட்டு வாதங்களை ஒரு வாரத்திற்குள் முழுமையாகத் தயாரிக்க முடியாது என்றும் தலைமை நீதிபதி கூறினார்.
போதைப்பொருள் கடத்தல்காரனின் மரண தண்டனையைத் தள்ளிவைத்தது மேல்முறையீட்டு நீதிமன்றம்
24 May 2019 10:51
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!