சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட தனது ‘பிஎம்டபள்யூ’ காரின் பெட்ரோல் தொட்டியை நிரப்பக் காத்திருந்த அதன் ஓட்டுநர், காரின் பதிவு எண் பலகையை மாற்றியதாகத் தகவல் வெளிவந்துள்ளது. மே 18ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகக் கூறிய நிலப் போக்குவரத்து ஆணையம், காரின் உரிமையாளர் இது குறித்து தம்மிடம் விளக்க அறிக்கையைக் கொடுத்துள்ளதாகவும் கூறியது.
மே 18ஆம் தேதி காலை 7.30 மணி வாக்கில் ஜோகூரின் கேலாங் பத்தாவிலுள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் இந்தச் சம்பவம் நடந்தது. கார் ஓட்டுநர் ‘எஸ்எல்எக்ஸ்27இ’ (SLX27E) என்ற தனது பதிவு எண் பலகையை, ‘எஸ்கேடி2777சி’ (SKD2777C) என்ற பதிவு எண் கொண்ட பலகைக்கு மாற்றினார். அதன் பிறகு அவர் தனது காரை மலேசிய நெடுஞ்சாலையில் அனுமதிக்கப்பட்ட வேக வரம்பை மீறிய வேகத்தில் ஓட்டி போக்குவரத்து போலிசாரிடம் பிடிபட்டார். ஆனால் அவருக்குக் கொடுக்கப்படவேண்டிய 150 ரிங்கிட் (49 வெள்ளி) அழைப்பாணை, உண்மையிலேயே ‘எஸ்கேடி2777சி’ பதிவு எண்ணைக் கொண்ட ஹியூண்டாய் கார் ஓட்டுநருக்குக் கிடைத்தது.
பதிவு எண் பலகையை அந்த ஓட்டுநர் மாற்றியதை மற்றொரு காரில் உள்ள கண்காணிப்புக் கேமரா காணொளி எடுத்தது.
ஜோகூர் பாருவில் காரின் பதிவு எண் பலகையை மாற்றிய சிங்கப்பூரர்
27 May 2019 13:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!